செய்திகள்
தலைமை செயலாளர் சண்முகம்

கொரோனா தடுப்பு- தலைமை செயலாளர் 15 மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை

Published On 2020-07-06 12:10 GMT   |   Update On 2020-07-06 12:10 GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தலைமை செயலாளர் சண்முகம் 15 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை:

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

அண்டை மாநிலங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் தமிழ்நாட்டின் எல்லையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தலைமை செயலாளர் சண்முகம் இன்று சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட15 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனை நடந்து வருகிறது.
Tags:    

Similar News