செய்திகள்
கைது

7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர் கைது

Published On 2020-07-05 09:23 GMT   |   Update On 2020-07-05 09:23 GMT
கோவையில் 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த முதியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை:

கோவையை சேர்ந்த தம்பதிக்கு 7 வயதில் பெண் குழந்தையும், 5 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த தம்பதிகள் தள்ளு வண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்கள் பகலில் வியாபாரத்துக்கு செல்லும்போது குழந்தைகளை தனது உறவினரான புலியகுளத்தை சேர்ந்த வரதராஜன் (வயது 65) என்பவர் வீட்டில் விட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் வரதராஜன், 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் அந்த சிறுமி அங்கு செல்ல மறுத்ததுடன், தாத்தா தன்னிடம் தவறாக நடந்து கொள்கிறார் என்றும் கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது குறித்து கோவை மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அந்த சிறுமியை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று பரிசோதனை செய்தனர். அதில் அந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து வரதராஜனை கைது செய்தனர். அத்துடன் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 
Tags:    

Similar News