செய்திகள்
கொரோனா வைரஸ்

மதுரையில் நான்காயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

Published On 2020-07-05 03:24 GMT   |   Update On 2020-07-05 03:24 GMT
மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 315 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,091 ஆக உயர்ந்துள்ளது.
மதுரை:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

கொரோனா தடுப்பு தீவிர நடவடிக்கையாக மதுரையில் வருகிற 12-ந் தேதி வரை மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 3,776 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 315 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,091 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 994 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 57 பேர் உயிரிழந்துள்ளனர். 
Tags:    

Similar News