செய்திகள்
கைது

சோளிங்கர் அருகே போலி டாக்டர் கைது

Published On 2020-07-03 13:35 GMT   |   Update On 2020-07-03 13:35 GMT
சோளிங்கர் அருகே போலி டாக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோளிங்கர்:

சோளிங்கர் பகுதியில் போலி டாக்டர்கள் சிலர் சிகிச்சை மையம் நடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணிப்பேட்டை மாவட்ட கொரோனா தடுப்பு மருத்துவ அலுவலர் பிரகாஷ்அய்யப்பன் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன், வருவாய் ஆய்வாளர் லோகேஷ் மற்றும் மருத்துவ அலுவலர்கள் சோளிங்கரை அடுத்த ஜம்புகுளம் கிராமத்துக்கு சென்றனர். அங்குள்ள ஒரு சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த பாணாவரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா (வயது 49) என்பவரை பிடித்து விசாரித்தனர். அவர், அலோபதி மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு அலோபதி மருத்துவம் பார்த்ததாக கூறினார். இதையடுத்து போலி டாக்டர் ராஜாவை போலீசார் கைது செய்தனர். அவரின் சிகிச்சை மையத்தில் பயன்படுத்திய ஊசி மற்றும் மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News