செய்திகள்
தியாகதுருகம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
தியாகதுருகம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்டாச்சிமங்கலம்:
தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் உளுந்தூர்பேட்டை அருகே சேந்தநாடு கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் (வயது 21), சங்கராபுரம் அருகே திம்மனந்தல் கிராமத்தை சேர்ந்த கதிரவன் (வயது 32) என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் எலவனாசூர்கோட்டையை சேர்ந்த ஆயிஷா என்ற பெண்ணிடம் இருந்து கைப்பையுடன் 1 பவுன் நகை மற்றும் ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றவர்கள் என்பதும், சித்தேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து பாலமுருகன், கதிரவன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து நகை, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் உளுந்தூர்பேட்டை அருகே சேந்தநாடு கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் (வயது 21), சங்கராபுரம் அருகே திம்மனந்தல் கிராமத்தை சேர்ந்த கதிரவன் (வயது 32) என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் எலவனாசூர்கோட்டையை சேர்ந்த ஆயிஷா என்ற பெண்ணிடம் இருந்து கைப்பையுடன் 1 பவுன் நகை மற்றும் ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றவர்கள் என்பதும், சித்தேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து பாலமுருகன், கதிரவன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து நகை, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.