செய்திகள்
வாழவச்சனூரில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர் வசித்த தெருவுக்கு சீல்
வாழவச்சனூரில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர் வசித்த தெருவுக்கு சீல் வைக்கப்பட்டது.
வாணாபுரம்:
இந்த நிலையில் அவர் வசித்த தெருவில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் ராஜசேகரன் ஆகியோர் தலைமையில் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அந்த தெருவில் தற்காலிகமாக தடுப்புகள் அமைத்து ‘சீல்’ வைக்கப்பட்டது.
வாணாபுரம் அருகே உள்ள வாழவச்சனூரில் 25 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்து குணமடைந்து அவர் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் அவர் வசித்த தெருவில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் ராஜசேகரன் ஆகியோர் தலைமையில் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அந்த தெருவில் தற்காலிகமாக தடுப்புகள் அமைத்து ‘சீல்’ வைக்கப்பட்டது.