செய்திகள்
வடமதுரை அருகே சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமதுரை:
வடமதுரை அருகே புத்தூர் பூசாரிபட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக வடமதுரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது பூசாரிபட்டி நாடகமேடை அருகே 4 பேர் சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் பூசாரிபட்டியை சேர்ந்த சந்திரசேகர் (வயது 28), ராஜேந்திரன் (30), கருப்பையா (27), ரவிக்குமார் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.400 பறிமுதல் செய்யப்பட்டது.
வடமதுரை அருகே புத்தூர் பூசாரிபட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக வடமதுரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது பூசாரிபட்டி நாடகமேடை அருகே 4 பேர் சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் பூசாரிபட்டியை சேர்ந்த சந்திரசேகர் (வயது 28), ராஜேந்திரன் (30), கருப்பையா (27), ரவிக்குமார் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.400 பறிமுதல் செய்யப்பட்டது.