செய்திகள்
இளம்பெண் தற்கொலை

கோவை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-07-03 08:53 GMT   |   Update On 2020-07-03 08:53 GMT
கோவை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போத்தனூர்:

கோவை சுந்தராபுரம் பிள்ளையார்புரத்தை சேர்ந்தவர் இளங்கோ (வயது 28). இவர் கோவையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார். அங்கு வேலை செய்து வந்த அஞ்சலி (24) என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 மாத குழந்தை உள்ளது.

இந்த நிலையில் வீட்டில் இருந்த அஞ்சலி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தற்கொலை செய்து கொண்ட அஞ்சலிக்கு திருமணம் முடிந்து 2 ஆண்டுகளே ஆவதால் அவருடைய சாவு குறித்து கோவை ஆர்.டி.ஓ.வும் விசாரித்து வருகிறார்.
Tags:    

Similar News