செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

இளம் வழக்கறிஞர்களுக்கு ரூ.3000 நிதியுதவி - முதலமைச்சர் உத்தரவு

Published On 2020-07-02 11:58 GMT   |   Update On 2020-07-02 11:58 GMT
இளம் வழக்கறிஞர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.3000 நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஏழைக் குடும்பத்திலிருந்து சட்டம் பயின்றுவிட்டு வழக்கறிஞர்களாக பணியாற்ற 3 அல்லது 4 ஆண்டு தேவைப்படுகிறது. வறுமையில் இருக்கும் வழக்கறிஞர்களுக்கு உதவும் நோக்கத்துடன் திட்டம் அமல்படுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News