செய்திகள்
ஒரே குடும்பத்தில் பரிதாபம் : மகன் இறந்த 10-வது நாளில் தாயும் கொரோனாவுக்கு பலி
கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் மகன் இறந்த 10-வது நாளில் தாயும் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கரூர்:
கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் சென்னையில் இருந்து காரில் சொந்த ஊரான கரூருக்கு வந்த அவருக்கு, காய்ச்சல் மற்றும் சளி இருந்ததால் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து கரூர் அரசு மருத்துவமனையில், தனிவார்டில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த 21-ந்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது 58 வயதான தாய்க்கும் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 23-ந்தேதி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், அவரும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
கரூர் மாவட்டத்தில், இதுவரை மொத்தம் 3 பேர் கொரோனாவுக்கு பலியானதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் சென்னையில் இருந்து காரில் சொந்த ஊரான கரூருக்கு வந்த அவருக்கு, காய்ச்சல் மற்றும் சளி இருந்ததால் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து கரூர் அரசு மருத்துவமனையில், தனிவார்டில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த 21-ந்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது 58 வயதான தாய்க்கும் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 23-ந்தேதி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், அவரும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
கரூர் மாவட்டத்தில், இதுவரை மொத்தம் 3 பேர் கொரோனாவுக்கு பலியானதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.