செய்திகள்
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் வழக்கு: எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது- 6 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொலை உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் குறித்து சிபிசிஐடி உடனடியாக விசாரணை தொடங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று சிபிசிஐடி பல்வேறு குழுக்களாக சென்று விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.
காவலில் உயிரிழப்பு என்றிருந்ததை பிரிவு 302-ன் கீழ் கொலைவழக்காக பதிவு செய்தது சிபிசிஐடி. சம்பவம் தொடர்பான 2 முதல் தகவல் அறிக்கைகளிலும் கொலை வழக்காக பதிவு. 6 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்தது.
எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.