செய்திகள்
டாஸ்மாக்

முழு ஊரடங்கு அமலாகும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

Published On 2020-07-01 14:07 GMT   |   Update On 2020-07-01 14:07 GMT
முழு ஊரடங்கு அமலாகும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை:

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் ஜூலை மாதம் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ஜூலை மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், முழு ஊரடங்கு அமலாகும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, ஜூலை மாதம் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News