செய்திகள்
பூட்டை உடைத்து கொள்ளை

வாகன உதிரிபாக கடையின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் கொள்ளை

Published On 2020-07-01 08:52 GMT   |   Update On 2020-07-01 08:52 GMT
திருத்துறைப்பூண்டியில் வாகன உதிரிபாக கடையின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்கணேஷ் (வயது 45). இவர், திருத்துறைப்பூண்டி-வேதாரண்யம் சாலையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு இவர் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவில் மர்ம நபர்கள் கடையின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கல்லாவில் இருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.

மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பதிவு செய்வதற்கும், கடையின் வரவு- செலவு கணக்குகளை பதிவு செய்வதற்கும் பயன்படுத்தி வரும் கணினியின் சி.பி.யு. கருவியையும் மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி, இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர் தேவதாஸ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரான்சிஸ், ராஜேந்திரன் மற்றும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News