செய்திகள்
இறைவனுக்கு நிகராக மருத்துவர்களை கருதுகின்றேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை இறைவனுக்கு நிகராக கருதுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
சென்னை:
டாக்டர் பிதான் சந்திரா ராய் சேவையை பாராட்டி ஜூலை 1-ந்தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக நோயாளிகளின் உயிரை காப்பாற்ற நம் டாக்டர்கள் நேரம், காலம் பார்க்காமல் குடும்பத்தையே மறந்து, வேளைக்கு உணவு உட்கொள்ளாமல் எல்லையில் நாட்டை காக்கும் ராணுவ வீரர்கள் போன்று நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிராக தீவிரமாக போர்களத்தில் போர் வீரன் போல் பணியாற்றி வருகின்றனர்.
அவர்களுக்கு தேசிய மருத்துவர் தினமான இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை நான் இறைவனுக்கு நிகராக கருதுகின்றேன். கொரோனா காலத்தில் உயிரை பொருட்படுத்தாமல் கடமை, கண்ணியத்துடன் மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். மருத்துவர்களின் தியாகத்திற்கு நிகர் ஏதுமில்லை; மனித உயிர்களை காக்கும் மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
டாக்டர் பிதான் சந்திரா ராய் சேவையை பாராட்டி ஜூலை 1-ந்தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக நோயாளிகளின் உயிரை காப்பாற்ற நம் டாக்டர்கள் நேரம், காலம் பார்க்காமல் குடும்பத்தையே மறந்து, வேளைக்கு உணவு உட்கொள்ளாமல் எல்லையில் நாட்டை காக்கும் ராணுவ வீரர்கள் போன்று நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிராக தீவிரமாக போர்களத்தில் போர் வீரன் போல் பணியாற்றி வருகின்றனர்.
அவர்களுக்கு தேசிய மருத்துவர் தினமான இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை நான் இறைவனுக்கு நிகராக கருதுகின்றேன். கொரோனா காலத்தில் உயிரை பொருட்படுத்தாமல் கடமை, கண்ணியத்துடன் மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். மருத்துவர்களின் தியாகத்திற்கு நிகர் ஏதுமில்லை; மனித உயிர்களை காக்கும் மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.