செய்திகள்
கைது

சிறுமியை கடத்திய காதலன் கைது

Published On 2020-06-30 10:35 GMT   |   Update On 2020-06-30 10:35 GMT
மன்னார்குடியில் சிறுமியை கடத்திய காதலனை கைது செய்த போலீசார், சிறுமியை மீட்டு அவரது பாட்டியிடம் ஒப்படைத்தனர்.
மன்னார்குடி:

மன்னார்குடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியின் தாய், தந்தை வெளிநாட்டில் உள்ளனர். இதனால் அந்த சிறுமி நீடாமங்கலத்தை அடுத்த நாவல்பூண்டியில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கி இருந்தார்.

இந்தநிலையில் அந்த சிறுமியிடம், அதே பகுதியை சேர்ந்த டிரைவரான திருநிறைச்செல்வன் (வயது 26) என்பவர் பழகி வந்துள்ளார். பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த சிறுமியின் பாட்டி சிறுமியை திருமக்கோட்டை அருகே உள்ள அவர்களது உறவினர் வீட்டில் கொண்டு விட்டார்.

இந்தநிலையில் சிறுமியை திடீரென காணவில்லை. இதுகுறித்து சிறுமியின் பாட்டி மன்னார்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது பேத்தியை டிரைவர் திருநிறைச்செல்வன் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுவிட்டார் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பகவதி சரணம் வழக்குப்பதிவு செய்து சிறுமியை மீட்டு அவரது பாட்டியிடம் ஒப்படைத்தார். பின்னர் திருநிறைச்செல்வனை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News