செய்திகள்
கைது

பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்- 2 பேர் கைது

Published On 2020-06-30 10:23 GMT   |   Update On 2020-06-30 10:23 GMT
திருச்சியில் பெண் ஒருவர் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக அப்பெண்ணின் கணவர் மற்றும் மதபோதகர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி:

திருச்சி கே.கே.நகர் அன்பில் தர்மலிங்கம் நகரை சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவரும், கே.கே.நகர் அய்யப்பநகரை சேர்ந்த இந்து மதத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரும் 12 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கணவர் இந்து மதத்தை சேர்ந்தவராக இருந்ததால் அவரை மதம் மாற்றுவதற்காக திருச்சி மதுரைரோடு பகுதியை சேர்ந்த மதபோதகர் முகமது பாரூக்கிடம் அப்பெண் அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரது கணவருக்கு முஸ்லிம் பெயர் வைக்கப்பட்டது. அதன்பின்னர் முகமது பாரூக்கின் பேச்சால் ஈர்க்கப்பட்ட அப்பெண்ணின் கணவர் அவருடன் நட்பாக நெருங்கி பழகியுள்ளார்.

இந்த நட்பை பயன்படுத்தி கொண்ட முகமது பாரூக், அப்பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்று புனிதநீர் கொடுப்பதாக கூறி மயக்க மருந்து கொடுத்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவரது கணவரும் உடந்தையாக இருந்ததாக தெரிகி றது. மேலும், அப்பெண்ணிடம் இருந்த 25 பவுன் நகைகளையும் பறித்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட அப்பெண், தனது கணவர் மற்றும் முகமது பாரூக், அவரது மனைவி, சகோதரி ஆகியோர் மீது திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த வேதவள்ளி விசாரணை நடத்தி 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, முகமதுபாரூக் மற்றும் அப்பெண்ணின் கணவர் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
Tags:    

Similar News