செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே மின்னல் தாக்கி விவசாயி பலி
கும்மிடிப்பூண்டி அருகே மின்னல் தாக்கி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென இடியுடன் கூடிய கன மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் பெய்த இந்த கனமழையின் போது, ஆரம்பாக்கம் அடுத்த பூவலை கிராமத்தில் மாந்தோப்பில் ஆடு மேய்த்து கொண்டிருந்த விவசாய தொழிலாளியான செங்கையா (வயது 55) என்பவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார். மேலும் அவர் மேய்த்து கொண்டிருந்த 2 ஆடுகளும் மின்னல் தாக்கி உயிரிழந்தன.
இந்த சம்பவம் குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த செங்கையாவிற்கு நாகம்மாள் (50) என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.