செய்திகள்
கைது

லாரியில் மணல் கடத்தல்- டிரைவர் கைது

Published On 2020-06-28 10:41 GMT   |   Update On 2020-06-28 10:41 GMT
கரூர் அருகே லாரியில் மணல் கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:

கரூர் வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார், தண்ணீர்பந்தலில் இருந்து வெண்ணெய்மலை செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில், அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மணல் கடத்தி வந்ததாக மண்மங்கலத்தை சேர்ந்த லாரி டிரைவர் சந்துரு (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்தனர். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய லாரி உரிமையாளர் ராஜேஷ்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News