செய்திகள்
குளித்தலை அருகே மது விற்ற 2 பேர் கைது
குளித்தலை அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை:
குளித்தலை அருகே உள்ள தண்ணீர்பள்ளியில் மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் குளித்தலை போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்றுக்கொண்டிருந்த தண்ணீர்பள்ளி பகுதியை சேர்ந்த பொன்னம்பலம் (வயது 47), நெடுஞ்செழியன் (51) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.800 ரொக்கம், மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குளித்தலை அருகே உள்ள தண்ணீர்பள்ளியில் மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் குளித்தலை போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்றுக்கொண்டிருந்த தண்ணீர்பள்ளி பகுதியை சேர்ந்த பொன்னம்பலம் (வயது 47), நெடுஞ்செழியன் (51) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.800 ரொக்கம், மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.