செய்திகள்
ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி

மேலும் 4 மாதம் அவகாசம் கேட்டது ஆறுமுகசாமி ஆணையம்

Published On 2020-06-22 14:00 GMT   |   Update On 2020-06-22 14:00 GMT
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் மேலும் 4 மாதம் அவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.
சென்னை:

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதி உத்தரவிட்டது.

தொடர்ந்து சசிகலா, சசிகலா உறவினர்கள், போயஸ்கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், பணியாளர்கள் என 150-க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது.

இந்நிலையில் மேலும் 4 மாதம் அவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. வரும் 24ந்தேதியுடன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அவகாசம் முடியும் நிலையில் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் 8வது முறையாக அவகாசம் கேட்டுள்ளது.
Tags:    

Similar News