செய்திகள்
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டிலும் 2 மருத்துவ முகாம்- ஆணையர் பிரகாஷ்

Published On 2020-06-22 08:15 GMT   |   Update On 2020-06-22 08:15 GMT
200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டிலும் தலா 2 மருத்துவ முகாம் நடைபெற்று வருவதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னையில் 1 லட்சத்து 20 ஆயிரம் லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாக உள்ளன. தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளோருக்கு உதவ சுமார் 4 ஆயிரம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டிலும் தலா 2 மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. மருத்துவ முகாம் நடைபெறும் பகுதிகள் குறித்து வீதி, வீதியாக சென்று ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படுகிறது. மருத்துவ முகாம்களுக்கு மக்கள் வரத்தொடங்கியிருப்பதால் பரிசோதனைகள் அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News