செய்திகள்
வானிலை நிலவரம்

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ள இடங்கள்

Published On 2020-06-20 10:21 GMT   |   Update On 2020-06-20 10:21 GMT
கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக கடலோர மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகள், தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 29 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு விழுப்புரம், கடலூர், புதுவை, நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியசை ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், கோவை மாவட்டம் சோலையார்,  மதுரை மாவட்டம் கல்லந்தரி ஆகிய பகுதிகளில் தலா 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையில் 2 சென்டி மீட்டர், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் தலா ஒரு சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் இன்று சூறாவளி காற்று வீசக்கூடும். தென்மேற்கு மற்றம் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 23ம் தேதி வரை பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News