செய்திகள்
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

கொரோனா சிகிச்சைக்காக அண்ணா பல்கலைக்கழகத்தை ஒப்படைக்க வேண்டும் - மாநகராட்சி ஆணையர்

Published On 2020-06-19 12:09 GMT   |   Update On 2020-06-19 12:09 GMT
கொரோனா சிகிச்சைக்காக அண்ணா பல்கலைக்கழகத்தை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறி உள்ளார்.
சென்னை:

கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக அண்ணா பல்கலைக்கழக விடுதியை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஒப்படைக்குமாறு மாநகராட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால் பல்கலைக்கழக விடுதியில் மாணவர்களின் உடைமைகள் இருப்பதால் இப்போதைக்கு ஒப்படைக்க முடியாது என்று துணைவேந்தர் கூறியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது:

தேசிய பேரிடர் காலத்தில், அரசு கட்டடங்கள் மருத்துவ முகாமிற்காக பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகத்தை குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்று மாநகராட்சி மூலம் கடிதம் எழுதி உள்ளோம். ஆகவே அண்ணா பல்கலைக்கழத்தை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News