செய்திகள்
சென்னை மாநகராட்சி

அண்ணா பல்கலைக்கழக விடுதிகளை ஒப்படைக்க வேண்டும்: சென்னை மாநகராட்சி

Published On 2020-06-18 14:52 GMT   |   Update On 2020-06-18 14:52 GMT
கொரோனா தனிமை முகாம்களாக மாற்றுவதற்காக அண்ணா பல்கலைக்கழக விடுதிகளை ஒப்படைக்குமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை:

சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தனிமைப்படுத்துதல் முகாம்கள் அமைக்க பல கட்டடங்கள் தற்போது உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன

தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு கல்லூரிகள் உள்பட பல கட்டிடங்கள் தற்போது தனிமைப்படுத்தல் முகாமாக மாறி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாணவர் விடுதியும் தனிமைப்படுத்துதல் முகாமாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது

இதனை அடுத்து அண்ணா பல்கலைக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் வரும் 20-ஆம் தேதிக்குள் அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதியை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பதிவாளருக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News