செய்திகள்
திமுக மகளிரணி கூட்டம்- காணொலிக்காட்சி வழியாக நடந்தது
தி.மு.க. மகளிரணி ஆலோசனைக் கூட்டம் மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் காணொலிக்காட்சி வழியாக நடந்தது.
சென்னை:
தி.மு.க. மகளிரணி ஆலோசனைக் கூட்டம் மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் நேற்று நடந்தது. இதில் திருப்பூர், தஞ்சை, திருவாரூர், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க. மகளிரணி, மகளிர் தொண்டர் அணி, மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட துணை அமைப்பாளர்களுடன் காணொலிக் காட்சி வழியாக கட்சியின் கனிமொழி கலந்துரையாடினார்.
இந்த கூட்டத்தில் மகளிரணியின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் மகளிரணி சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா நிவாரண பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.
தி.மு.க. மகளிரணி ஆலோசனைக் கூட்டம் மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் நேற்று நடந்தது. இதில் திருப்பூர், தஞ்சை, திருவாரூர், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க. மகளிரணி, மகளிர் தொண்டர் அணி, மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட துணை அமைப்பாளர்களுடன் காணொலிக் காட்சி வழியாக கட்சியின் கனிமொழி கலந்துரையாடினார்.
இந்த கூட்டத்தில் மகளிரணியின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் மகளிரணி சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா நிவாரண பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.