செய்திகள்
ஆதரவாளர்களுடன் ஆர்.எஸ்.பாரதி

ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்ய அதிக ஆர்வம் காட்டுவது ஏன்? - காவல்துறைக்கு ஐகோர்ட் கேள்வி

Published On 2020-06-16 06:29 GMT   |   Update On 2020-06-16 06:32 GMT
ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்ய அதிக ஆர்வம் காட்டுவது ஏன்? என காவல்துறைக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியது.
சென்னை:

தாழ்த்தப்பட்ட மக்களையும் நீதிபதிகளையும் அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி மே மாதம் 23ம் தேதி கைது செய்யப்படடார். அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் முதலில் மே 31ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது. பின்னர் ஜூன் 1ம்தேதி வழக்கமான ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை  ரத்து செய்வதற்கு காவல்துறை காட்டும் அக்கறை தொடர்பாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மாநில அரசு கவனிக்க வேண்டிய ஏராளமான விஷயங்கள் உள்ள நிலையில், ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய காவல்துறை அதிக ஆர்வம் காட்டுவது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அத்துடன் வழக்கு விசாரணையை ஜூன் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 
Tags:    

Similar News