செய்திகள்
காவிரி ஆறு

மேகதாது அணை கோரிக்கை- தமிழக அரசு கடும் எதிர்ப்பு

Published On 2020-06-10 11:30 GMT   |   Update On 2020-06-10 11:30 GMT
மேகதாது அணை தொடர்பான கோரிக்கையை காவிரி ஆணையம் பரிசீலிக்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சென்னை:

காவிரி ஆற்றின் குறுக்கே தமிழக எல்லைக்கு மிக அருகில் மேகதாது என்ற இடத்தில் புதிய அணை ஒன்றை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. மிக பிரமாண்டமாக இரு மலைகளுக்கு இடையே கட்ட திட்டமிட்டுள்ள இந்த அணையால் தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் வருவது முழுமையாக நின்று விடும் அபாயம் உள்ளது.

எனவே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் சார்பில் காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தின்போது மேகதாது அணை குறித்து பரிசீலிக்க தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தது.

தமிழக அரசின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து மேகதாது அணை கோரிக்கை பற்றி காவிரி மேலாண்மை ஆணையம் பரிசீலிக்கவில்லை.
Tags:    

Similar News