செய்திகள்
விஜயகாந்த்

10-ம் வகுப்பு தேர்வு ரத்து: காலம் கடந்து எடுத்த முடிவு- விஜயகாந்த் கருத்து

Published On 2020-06-10 03:24 GMT   |   Update On 2020-06-10 03:24 GMT
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து எனும் முடிவை முன்கூட்டியே தெளிவாக எடுத்து இருக்கலாம். தேர்வு ரத்து என அறிவித்திருப்பது காலம் கடந்து எடுத்த முடிவாகும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை :

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து எனும் முடிவை முன்கூட்டியே தெளிவாக எடுத்து இருக்கலாம். தேர்வு ரத்து என அறிவித்திருப்பது காலம் கடந்து எடுத்த முடிவாகும். அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்தால் அதில் உறுதியாக இருக்க வேண்டும். அதைவிடுத்து நாளும் ஒரு நிலைப்பாடு எடுப்பதை தவிர்க்க வேண்டும். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல காலம் கடந்து எடுக்கப்பட்ட இந்த முடிவை உரிய நேரத்தில் அறிவித்திருந்தால் தே.மு.தி.க. நிச்சயம் வரவேற்று இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News