செய்திகள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் செங்கோட்டையன்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் திடீர் சந்திப்பு

Published On 2020-06-08 06:48 GMT   |   Update On 2020-06-08 06:48 GMT
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து பேசினார்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், வரும் 15ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அரசு தீவிரமாக செய்து வருகிறது.

இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது பொதுத்தேர்வு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பு கருதி தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், முதலமைச்சரை அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து பேசுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Tags:    

Similar News