செய்திகள்
டிடிவி தினகரன்

வேடந்தாங்கலை சிதைக்க முனைவதா?- தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

Published On 2020-06-08 03:53 GMT   |   Update On 2020-06-08 03:53 GMT
பல்லுயிர் பெருக்க மண்டலமான வேடந்தாங்கலை சிதைக்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு மத்திய அரசு அனுமதியளிக்கக் கூடாது என டிடிவி தினகரன் கூறி உள்ளார்.
சென்னை:

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய நிலத்தைச் சுருக்கி கட்டுமானங்களைச் செய்வதற்கு தமிழக அரசு முயற்சிப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன

உலகம் முழுக்க சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பல்லுயிர் பெருக்க மண்டலங்கள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், அப்படிப்பட்ட இடமான வேடந்தாங்கலை சிதைக்க முனைவது கண்டனத்திற்குரியது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசு அனுமதியளிக்கக் கூடாது

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News