செய்திகள்
கைது

ராணிப்பேட்டையில் மணல் கடத்திய 2 பேர் கைது

Published On 2020-06-07 10:09 GMT   |   Update On 2020-06-07 10:09 GMT
ராணிப்பேட்டையில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை):

சென்னை, சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சாமுவேல் (வயது 21), ராணிப்பேட்டை பிஞ்சி நடுத்தெருவை சேர்ந்த கணேஷ்ராஜ் (23) இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ராணிப்பேட்டை பாலாற்றில் இருந்து பிளாஸ்டிக் பைகளில் மணல் கடத்தி கொண்டு வந்துள்ளனர்.

சங்கர் நகர் அருகே வந்தபோது ரோந்து பணியில் இருந்த போலீசார் 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News