செய்திகள்
கைது

அய்யம்பேட்டையில் மேஸ்திரியை தாக்கிய வாலிபர் கைது

Published On 2020-06-07 09:17 GMT   |   Update On 2020-06-07 09:17 GMT
அய்யம்பேட்டையில் மேஸ்திரியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் சேகர் (வயது 48). இவர் சோழபுரம் பேரூராட்சியில் மேஸ்திரியாக உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ், அவரது நண்பர்கள் ஹரிஷ், மோகன் ஆகியோர் மேஸ்திரி சேகரை சரமாரியாக தாக்கினர். இதனால் படுகாயமடைந்த சேகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் திருப்பனந்தாள் போலீசில் புகார் அளித்தார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பேரூராட்சியில் தினக் கூலியாக உள்ள சதீஷின் அம்மாவிற்கு வேலை தரவில்லை என சேகரை தாக்கியது தெரியவந்தது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீசை கைது செய்தனர். மேலும் ஹரிஷ் மற்றும் மோகன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News