செய்திகள்
கைது

திருவள்ளூர் அருகே மணல் கடத்தல்- 3 பேர் கைது

Published On 2020-06-07 09:00 GMT   |   Update On 2020-06-07 09:00 GMT
திருவள்ளூர் அருகே மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த மப்பேடு போலீசார் நேற்று முன் தினம் பேரம்பாக்கம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வாகனங்களில் மணல் கடத்தி வந்த பேரம்பாக்கத்தை சேர்ந்த பார்த்திபன் (வயது 32), விஜயகுமார் (23) சந்துரு (19 )ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து லாரி, ஒரு டிராக்டர், இரண்டு மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News