செய்திகள்
கைது

அ.ம.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது

Published On 2020-06-06 14:57 GMT   |   Update On 2020-06-06 14:57 GMT
பெரம்பலூர் அ.ம.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் 12வது வார்டு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பாண்டி என்ற வல்லத்தரசு ( வயது 24). அ.ம.மு.க. மாணவரணி நகர செயலாளரான இவர் கடந்த 2-ந்தேதி இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

காயமடைந்த சூர்யா பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து சூர்யா கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா வழக்குபதிந்து கொலைக்குற்றவாளிகளான பத்மநாபன் மகன் பிரகாஷ் (24), செல்வக்குமார் மகன் விஜயராஜ்(30), ரெங்கசாமி மகன் ராஜா (34) மற்றும் கார்த்திக் (30) ஆகியோரை தேடிவந்த நிலையில் குற்றவாளிகள் 4 பேரும் கரூர் குற்றவியல் கோர்ட்டு 2வில்சரணடைந்தனர்.

இந்நிலையில் இந்த கொலை வழக்கில் மேலும் தொடர்புடைய பெரம்பலூர் எடத்தெருவை சேர்ந்த சுப்ரமணியன் மகன் முருகேசன் (32) , அழகிரி தெருவை சேர்ந்த கணேசன் மகன் மகேஷ் (31), ஆகியோரை பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர்.


Tags:    

Similar News