செய்திகள்
கைது

உதவி செய்வது போல் நடித்து விபத்தில் சிக்கியவரிடம் நகை கொள்ளை - 2 வாலிபர்கள் கைது

Published On 2020-06-06 13:00 GMT   |   Update On 2020-06-06 13:00 GMT
உதவி செய்வது போல் நடித்து விபத்தில் சிக்கியவரிடம் 3 பவுன் நகையை கொள்ளையடித்தது தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கரூர்:

கரூர் பஞ்மாதேவிபுதூர் பகுதியை சேர்ந்தவர் பெரிய சாமி (வயது 45). நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்பு தனது மோட்டார் சைக்கிளில் நரிக் கட்டியூர்பிரிவு சாலை அருகே சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்து விபத் தில் சிக்கினார் .

விபத்தில் காயம் அடைந்த அவரை தனியார் ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.

சிகிச்சைக்கு பின்னர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகை காணாமல் போனது பெரியசாமிக்கு தெரியவந்தது. இது குறித்து அவர் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாக ராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி னார். விசாரணையில் விபத்துநடந்த இடத்தில் இருந்து ஆம்புல ன்ஸ் வாகனத் தில் பெரிய சாமியுடன் 3 பேர் ஏறி சென்றது தெரிய வந்தது அவர்கள் சுங்ககேட் பகுதியை சேர்ந்த அலெக்ஸ் (23), பிரபாகரன் (25),புலியூர் பகுதியை சேர்ந்த முருகன் (30) என தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பெரியசாமி கழுத் தில் கிடந்த 3 பவுன் நகையை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து அலெக்ஸ் மற்றும் பிரபாகரன் ஆகிய இருவரையும் கைது செய் தனர். மேலும் தலைமறைவாக உள்ள துரைமுருகனை தேடி வருகின்றனர்.

உதவுவது போல் நடித்து விபத்தில் சிக்கியவரிடம் நகை கொள்ளையடித்த சம்பம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

Similar News