செய்திகள்
புக்கம்பட்டியில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை
சென்னையில் இருந்து புக்கம்பட்டிக்கு வந்த அரசு ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் 3 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டது.
மேச்சேரி:
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள புக்கம்பட்டி பகுதியை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் சென்னை கருவூலத்துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் சென்னையில் இருந்து புக்கம்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். இதைத்தொடர்ந்து மேச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா? என மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து புக்கம்பட்டி ஊராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் புக்கம்பட்டியில் 3 நாட்கள் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டது. இது குறித்து தண்டோரோ மூலம் அறிவிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள புக்கம்பட்டி பகுதியை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் சென்னை கருவூலத்துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் சென்னையில் இருந்து புக்கம்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். இதைத்தொடர்ந்து மேச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா? என மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து புக்கம்பட்டி ஊராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் புக்கம்பட்டியில் 3 நாட்கள் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டது. இது குறித்து தண்டோரோ மூலம் அறிவிக்கப்பட்டது.