செய்திகள்
கைது

உப்பிலியபுரம் அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்- அதிகாரியை தாக்கிய விவசாயி கைது

Published On 2020-06-06 10:33 GMT   |   Update On 2020-06-06 10:33 GMT
உப்பிலியபுரம் அருகே ஆக்கிரமிப்பு அகற்றிய அதிகாரியை தாக்கிய விவசாயியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உப்பிலியபுரம்:

உப்பிலியபுரம் அருகே உள்ள பாலகிருஷ்ணம்பட்டியை சேர்ந்தவர் பழனிவேல். விவசாயி. இவரது வீட்டில் இருந்த நடைபாதை ஆக்கிரமிப்பை பேரூராட்சி நிர்வாகம் அகற்றியது. இதனால் ஆத்திரமடைந்த அவர் பால கிருஷ்ணம்பட்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த இளநிலை உதவியாளர் செல்வகுமாரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து செல்வகுமார் உப்பிலியபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கலைச் செல்வன் வழக்கு பதிவு செய்து பழனிவேலை கைது செய்தனர்.

Tags:    

Similar News