செய்திகள்
கொரோனா வைரஸ்

துபாயில் இருந்து மதுரை வந்த 4 பேருக்கு கொரோனா

Published On 2020-06-06 08:45 GMT   |   Update On 2020-06-06 08:45 GMT
துபாயில் இருந்த வந்த 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்புது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவனியாபுரம்:

வேலைக்காக துபாய் சென்று கொரோனா ஊரடங்கால் தவித்த தமிழகத்தை சேர்ந்த 179 பேர் நேறறு முன்தினம் இரவு சிறப்பு விமானம் மூலம் மதுரைக்கு வந்தனர்.

அவர்களுக்கு விமான நிலையத்திலேயே சுகாதார பணியாளர்கள் கொரோனா பரிசோதனை விடிய விடிய செய்தனர். 179 பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்ட பின் அவர்கள் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள தனிமை முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

முன்னதாக கொரோனா பரிசோதனையின் போது 179 பேரின் பெயர், முகவரிகள் சேகரிக்கப்பட்டன.

இந்த நிலையில் கொரோனா பரிசோதனை முடிவுகளில் துபாயில் இருந்த வந்த 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்புது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 2 பேரும், தென்காசி, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவர்.

முகவரி மூலம் இவர்கள் கண்டறியப்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மற்ற 175 பேரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News