செய்திகள்
மானூர் அருகே விவசாயியிடம் வழிப்பறி- 3 பேர் கைது
விவசாயியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மானூர்:
மானூர் அருகே உள்ள கீழப்பிள்ளையார்குளம் குறிச்சி நகரைச் சேர்ந்தவர் கோபால் (வயது 60).
விவசாயியான இவர் அப்பகுதியில் உள்ள தனது தோட்டத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் மீனராஜ் (22), மாரியப்பன் மகன் உருதராஜா (22), கணபதி மகன் சசி கண்ணன் (22) அகிய 3 பேரும் சேர்ந்து கோபாலை வழிமறித்து, அரிவாளை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த ரூ.500 மற்றும் கைக்கடிகாரத்தை பறித்து சென்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில், மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மீனராஜ் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து, ரூ.500 மற்றும் கைக்கடிகாரத்தை மீட்டனர்.
மானூர் அருகே உள்ள கீழப்பிள்ளையார்குளம் குறிச்சி நகரைச் சேர்ந்தவர் கோபால் (வயது 60).
விவசாயியான இவர் அப்பகுதியில் உள்ள தனது தோட்டத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் மீனராஜ் (22), மாரியப்பன் மகன் உருதராஜா (22), கணபதி மகன் சசி கண்ணன் (22) அகிய 3 பேரும் சேர்ந்து கோபாலை வழிமறித்து, அரிவாளை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த ரூ.500 மற்றும் கைக்கடிகாரத்தை பறித்து சென்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில், மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மீனராஜ் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து, ரூ.500 மற்றும் கைக்கடிகாரத்தை மீட்டனர்.