செய்திகள்
முக கவசம் அணியாத 34 பேருக்கு அபராதம்
காளிப்பட்டி பகுதிகளில் முக கவசம் அணியாமல் வந்த 34 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.
மல்லசமுத்திரம்:
மல்லசமுத்திரம் ஒன்றிய பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், அருண்குமார் ஆகியோர் வருவாய் துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்தனர்.
அப்போது வையப்பமலை, காளிப்பட்டி பகுதிகளில் முக கவசம் அணியாமல் வந்த 34 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கடைகளிலும் ஆய்வு நடத்தப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது.