செய்திகள்
போலீசார் விசாரணை

கவுண்டம்பாளையம் அருகே 17 வயது சிறுமியை கடத்திய வாலிபர்

Published On 2020-06-05 07:31 GMT   |   Update On 2020-06-05 07:31 GMT
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே 17 வயது சிறுமியை கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கவுண்டம்பாளையம்:

கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் அஜித்குமார்(வயது23). இவருக்கு கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இருவரும் போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் இவர்களின் காதல் விவகாரம் சிறுமியின் வீட்டிற்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் சிறுமியை கண்டித்தனர். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி வெளியில் சென்ற சிறுமியை காணவில்லை.

பெற்றோர் அக்கம்பக்கம் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து துடியலூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அஜித்குமார் தான் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அஜித்குமார் மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News