செய்திகள்
தற்கொலை

நாகை அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

Published On 2020-06-04 14:22 GMT   |   Update On 2020-06-04 14:22 GMT
நாகை அருகே திருமணமாகாத வேதனையில் வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
திருவாரூர்:

நாகை அருகே திட்டச்சேரியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கல் கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தவர் முருகேசன்(வயது27). இவர் கறம்பக்குடி அடுத்த பட்டுக்கோட்டை அருகே காட்டாத்தி நம்பிரால் பகுதியை சேர்ந்தவர்.

இநநிலையில் தனக்கு திருமணமாகவில்லையே என்ற வேதனையில் முருகேசன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் பெட்ரோல் பங்கில் உள்ள ஒரு அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி அப்பகுதி வி.ஏ.ஓ. ஞானவேல் கொடுத்த புகாரின்பேரில் திட்டச்சோரி இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News