செய்திகள்
கைது

திண்டிவனம் அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்திய 2 பேர் கைது

Published On 2020-06-04 09:21 GMT   |   Update On 2020-06-04 09:21 GMT
திண்டிவனம் அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
திண்டிவனம்:

திண்டிவனம் அருகே கடவம்பாக்கம் பகுதியில் ஒலக்கூர் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ரோந்து சென்றார். அப்போது எந்தவித அரசு ஆவணங்கள் இல்லாமல் 2 பேர் மாட்டு வண்டியில் தலா 1/4 யூனிட் மணல் கடத்தி வந்தனர்.

அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் கடவம்பாக்கம் சுடுகாடு அருகிலிருந்து மணலை எடுத்து வந்ததாகவும் ஆவணிப்பூர் ரெட்டியார் தெருவை சேர்ந்த ஜெயபால், கருணாநிதி ஆகியோர் என தெரிந்தது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

திண்டிவனம் அருகே தீவனூரை சேர்ந்தவர் ஏழுமலை (வயது32). இவர் புறம்போக்கு நிலத்தில் டிராக்டரை நிறுத்தி இருந்தார். இதனை அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர் சுதாகர் தட்டி கேட்டார்.

இதனால் கோபம் அடைந்த ஏழுமலை கிராம நிர்வாக அலுவலர் சுதாகரை தகாத வார்த்தையால் திட்டினார். சுதாகர் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளிமேடு பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர்.
Tags:    

Similar News