செய்திகள்
பாபநாசம் அருகே முதியவருக்கு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
பாபநாசம் அருகே முதியவருக்கு மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாபநாசம்:
பாபநாசம் அருகே ராஜகிரி மெயின் ரோட்டில் வசித்து வருபவர் அஸ்லாம் பாட்சா (வயது 60). இவரை முன் விரோதம் காரணமாக திருச்சி ஆட்டோ பர்வீஸ், ராஜகிரி ரபீக் அகமது ஆகிய இருவரும் சேர்ந்து திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அஸ்லாம் பாட்சா கொடுத்த புகாரின் பேரில் ஆட்டோ பர்வீஸ், ரபீக் அகமது ஆகியோர் மீது பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் துர்கா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.