செய்திகள்
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு -வானிலை மையம்
வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவலாவில் (நீலகிரி) 9 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. சித்தாரில் 8 சென்டி மீட்டர், பெருஞ்சாணி, புத்தன் அணைக்கட்டில் தலா 6 சென்டி மீட்டர், பேச்சிப்பாறை, சிவலோகம், நாவலூரில் தலா 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவலாவில் (நீலகிரி) 9 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. சித்தாரில் 8 சென்டி மீட்டர், பெருஞ்சாணி, புத்தன் அணைக்கட்டில் தலா 6 சென்டி மீட்டர், பேச்சிப்பாறை, சிவலோகம், நாவலூரில் தலா 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.