செய்திகள்
பொள்ளாச்சியில் போலீஸ் ஏட்டை தாக்க முயன்ற வாலிபர் கைது
பொள்ளாச்சியில் போலீஸ் ஏட்டை தாக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் அபியுல்லா. இவர் இரவு ரோந்து பணி சென்றபோது மார்க்கெட் ரோடு பகுதியில் பெட்டிக் கடை அருகே நின்றுகொண்டு பலர் மது அருந்தினர். இதை பார்த்த தலைமை காவலர் மது அருந்திக் கொண்டிருந்தவர்களை அப்புறப்படுத்தி உள்ளார்.
மேலும் அந்த பெட்டி கடைக்காரரை கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பெட்டிக்கடைக்காரர் முகமது ரபிக் (32) என்பவர் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தலைமை காவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முகமது ரபீக் கைது செய்யப்பட்டுள்ளார்