செய்திகள்
பெண் பலி

சிவகாசியில் கணவரை மிரட்ட உடலில் தீ வைத்த பெண் பலி

Published On 2020-06-02 07:29 GMT   |   Update On 2020-06-02 07:29 GMT
சிவகாசியில் கணவரை மிரட்ட உடலில் தீ வைத்த பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்:

சிவகாசி மின்வாரிய காலனியை சேர்ந்தவர் வெங்கடேஷ், பட்டாசு ஏஜெண்டு. இவரது மனைவி ராஜராஜேஸ்வரி (வயது 39). இவர்களுக்கு 13 வயதில் மகன் உள்ளார்.

கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது கணவரை மிரட்டும் வகையில், ராஜராஜேஸ்வரி தனது உடலில் தீ வைத்து தற்கொலை செய்யப் போவதாக கூறினார். தீக்குச்சியை பொருத்திக் கொண்டு அவர், வாக்கு வாதம் செய்தபோது எதிர்பாராத விதமாக சேலையில் தீ பிடித்தது.

கணவர் மற்றும் அக்கம் பக்கத்தினர் தீ காயத்துடன் ராஜராஜேஸ்வரியை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News