செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Published On 2020-06-02 07:14 GMT   |   Update On 2020-06-02 07:14 GMT
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பேசுகிறார்.
சென்னை:

சென்னை ராஜ்பவனில் இன்று மாலை 4.30 மணி அளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தொற்றை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க உள்ளார்.

2 மாதங்களில் 3-வது முறையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News