செய்திகள்
கப்பலில் இருந்து இறங்கிய பயணிகள்

இலங்கையில் இருந்து 685 இந்தியர்களுடன் தூத்துக்குடி வந்து சேர்ந்தது கடற்படை கப்பல்

Published On 2020-06-02 05:34 GMT   |   Update On 2020-06-02 05:34 GMT
இலங்கையில் இருந்து 685 இந்தியர்களுடன் புறப்பட்ட கடற்படை கப்பல் இன்று தூத்துக்குடி வந்து சேர்ந்தது.
தூத்துக்குடி:

ஊரடங்கால் வெளிநாடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலமாகவும், கப்பல்கள் மூலமாகவும் அழைத்து வரப்படுகின்றனர்.

அவ்வகையில் இலங்கையில் சிக்கியிருந்த 685 இந்தியர்கள் சமுத்திர சேது திட்டத்தின்கீழ், இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டனர். நேற்று இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட அந்த கப்பல் இன்று தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது.

தாயகம் திரும்பியது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், தங்கள் பயணம் இனிமையாக இருந்ததாகவும் பயணிகள் தெரிவித்தனர். தங்களை அழைத்து வந்த இந்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினர்.

அழைத்து வரப்பட்ட இந்தியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு,  சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News