செய்திகள்
மணல் கடத்தல்

தஞ்சை அருகே வெண்ணாற்றில் மணல் அள்ளிய 6 மாட்டு வண்டிகள் பறிமுதல்

Published On 2020-06-01 14:28 GMT   |   Update On 2020-06-01 14:28 GMT
தஞ்சை அருகே வெண்ணாற்றில் மணல் அள்ளிய 6 வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வல்லம்:

தஞ்சையை அடுத்த வெண்ணலோடை பகுதியில் கள்ளப்பெரம்பூர் இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் அபானா அஞ்சும் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

அப்போது வெண்ணாற்றில் இருந்து 6 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றிக் கொண்டு மரவனபத்து பகுதி அருகே சிலர் வந்தனர்.

போலீசாரை பார்த்ததும் மாட்டு வண்டிகளை நிறுத்தி விட்டு 6 பேரும் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 6 பேரை தேடி வருகின்றனர். 6 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News